Take a fresh look at your lifestyle.

இதயம் முரளி திரைவிமர்சனம்

10

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா,பிரித்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி, நிகாரிகா, தமன், ரக்ஷன், டிராவிட். அஞ்சு குரியன், சுதாகர், யாஷா Sri மற்றும் பலர் நடித்து வெளியாகியிருகாகும் படம் இதயம் முரளி.

கதை

திரைப்படத்தின் ஆரம்பத்தில் அதர்வாவின் திருமண ஏற்பாடுகளை அவரது மாமன் நட்டி நட்ராஜ் கவனித்துக் கொள்கிறார் படத்தின் ஹீரோவா அதர்வாவிற்கு நாளை திருமணம் நடக்கும் நிலையில் அவர் நியூயார்க்கில் இருந்து தனது நண்பர்களுடன் விமான மூலம் சென்னை வருகிறார் வரும்பொழுது விமானத்தில் பகத் பாசிலை அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் சந்திக்கிறார்கள் அப்பொழுது பகத் பாசிலிடம் தனது திருமண ஏற்பாடுகள் மற்றும் பள்ளிப் பருவ காதலை பற்றி சொல்கிறார்கள் பள்ளிப் பருவத்தில் பிரீத்தி முகுந்தன் ஆசிரியரை காதலித்ததையும் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள் பிறகு டியூசன் செல்லும் இடத்தில் சாம் யை பார்த்த அதர்வா அவரை காதலிக்க தொடங்குகிறார் டென்னிஸ் விளையாடும் இடத்திற்கும் சாம்மை பார்க்க அதர்வா செல்கிறார் தனது காதலை
சாம்மிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என அதர்வா முயற்சிக்கிறார் அப்பொழுது தனது பிறந்தநாள் விழாவிற்காக அதர்வா மற்றும் அவரது நண்பர்களை தனது வீட்டிற்கு சாம் அழைக்கிறார் அங்கு சென்று தனது காதலை சொல்லிவிடலாம் என அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் சாம் வீட்டிற்கு செல்கிறார்கள் அங்கு சென்ற அவர்களுக்கு சாம் இரட்டையர்கள் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு அதர்வா தனது காதலை சாமிடம் சொல்லாமல் சென்று விடுகிறார்
அதன் பின்னர், கல்லூரி காலத்தில் அம்முவை சந்திக்கிறார். அவருடனும் நெருங்கி பழகும் இதயா அந்த ரயில் செல்லும் இடைவேளை காட்சியில் தனது காதலை சொல்லி அப்பென்னை திருமணம் செய்தாரா? அல்லது தனது மாமன் நட்டி நடராஜ் பார்த்த பெண்ணை திருமணம் செய்தார? என்பதே படத்தின் மீதிக்கதை

நாயகனாக அதர்வா மற்றும் பாயகியாக ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. கயாடு லோகர், நட்டி, நிகாரிகா, தமன், ரக்ஷன், டிராவிட். அஞ்சு குரியன், சுதாகர், யாஷா Sri என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதிபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
மனோஜ் பரமஹம்சாவின் கேமரா ஒர்க் படத்தை அழகாக காட்டுகிறது.தமனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் எடுத்துக்கொண்ட காதல் கதையை இன்னும் திரைக்கதையில் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3/5