Take a fresh look at your lifestyle.

லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்பட விமர்சனம்

12

லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்பட விமர்சனம்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெற்றி, பிரிகிடா, மாறன், பாண்டே மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லஷ்மிகாந்தன் கொலை வழக்கு.

கதை

கதாநாயகன் வெற்றிக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வறுமையில் சிக்கித்தவிக்கும் அவர் திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா ? தவறா ? என்பதை மனித உணர்வுகளின் அடிநாதத்தை தொடும் விதத்தில் சொல்லியிருப்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் வெற்றியின் நடிப்பு அருமை.
நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்கு, கிராமத்து வேடம் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, நடிப்பும் அருமை.வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்திற்குபெரிய பலம். தர்புகா சிவாவின் இசையும், பாரதியார், பாரதிதாசன் மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோரது பாடல் வரிகளும் படத்திற்கு பலம்.
கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோரது திரைக்கதை மற்றும் வசனங்கள் ஒரு எளிமையான கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறது

குற்றவாளியின் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் குற்ற பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதி வழங்க வேண்டுமே தவிர, வெறும் குற்றத்தின் அடிப்படையில், ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது நீதி அல்ல, என்பதை உரக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3/5