Take a fresh look at your lifestyle.

தமிழக மக்களின் சுகாதார உரிமைக்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்த எம் பி எல் கே சுதீஷ் …

5

இதனைப் பற்றி எம்பி எல்.கே சுதீஷ் கூறுகையில்..

தமிழ்நாட்டில் ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி, பயனடைந்த குடும்பங்கள், மருத்துவமனை அனுமதிகள் மற்றும் மாநிலத்தின் சுகாதார காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைப்பு குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினேன்.

மத்திய அரசின் பதிலில்,

தமிழ்நாட்டில் 86.48 லட்சம் குடும்பங்கள் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.27 கோடி மருத்துவ அனுமதிகளுக்கு ₹10,359.38 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நிதியாண்டுகளில் ₹1,574.77 கோடி மத்திய பங்கு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் முழுமையான மருத்துவ பாதுகாப்பைப் பெறுவதற்கும், அவர்களுக்கு உரிய மத்திய ஆதரவு தொடர்ந்து கிடைப்பதற்கும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்…