அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், பக்ஸ், சேத்தன், ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், அப்துல் லீ, வர்ஷினி கார்மேகம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 21 ல் வெளியாகும் படம் மொத ராத்திரி.
கதை
மொத ராத்திரி 13 மணி நேரத்திற்கு முன் என படம் துவங்குகிறது.
காதலியை இழந்த வலியுடன் மருதநாயகம் (ரிஷிகாந்த்) துபாயில் 6 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். சகோதரி மகனுக்கு காதுகுத்து என அவருக்கு காதுகுத்தி சொந்த ஊருக்கு அழைக்கும் குடும்பத்தினர் அவரது திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். மருதநாயகத்தை கட்டிக்க மண்டபத்தில் முத்துச்செல்வி (அனிஷ்மா அனில்குமார்) காத்திருக்க மாப்பிள்ளை வருவாரா? என எதிர்பார்க்கும் நேரத்தில் தனக்குத் திருமணம் ஆகப்போவதே தெரியாமல் வந்து இறங்குகிறார் மருதநாயகம்
சரி, இருவருக்கும் திருமணம் ஆகி மொத ராத்திரிக்கு போவார்கள் என பார்த்தால் அங்கே தான் ஒரு ட்விஸ்ட். விருப்பமே இல்லாமல் தான் அம்மாவின் அடிக்கு பயந்து முத்துச்செல்வி மண்டபத்துக்கு வந்திருக்கிறார். அங்கே இருந்து காதலனுடன் தப்பித்துச் செல்ல நினைக்க, காதலன் காதலியை சரியானஃநேரத்தில் பிக்கப் பண்ண வராமல் போக இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விடுகிறது. திருமணம் ஆனால், என்ன மொத ராத்திரிக்கு முன்பாக உன்னை கூட்டிட்டுப் போகிறேன் என வரும் காதலன் மொத ராத்திரிக்கு முன்பாக வந்தாரா? முத்துச்செல்வியை அழைத்துச் சென்றாரா? இல்லையா? மருதநாயகம் நிலை என்ன?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ரிஷிகாந்த் ஹீரோவாக மெச்சூரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக அனிஷ்மா அனில்குமார் கல்யாண மேடையில் போடும் ஆட்டமும், கிளைமேக்ஸில் கத்தும் காட்சியுமே போதும் ஒட்டுமொத்த பெண்களின் குமுறலாக வெடித்துள்ளார். நன்றாகவே நடித்துள்ளார்.
ஹீரோ, ஹீரோயினை தாண்டி மணமகளின் அம்மாவாக நடித்துள்ள ஷெல்லி கிஷோர், மாப்பிள்ளையின் அம்மாவாக நடித்துள்ள சங்கீதா பாலன், மாப்பிள்ளையின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் வெங்கடேஷ் தாய் மாமன் கதாபாத்திரத்தில் பக்ஸ், சகோதரி புருஷனாக நடித்துள்ள அப்துல் லீ மற்றும் இரு வீட்டார் பெண்கள், மன சாட்சி நண்பர்கள் என இதில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுரேந்திரன் பரன்ஜோதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
பரத் ஷங்கரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம்.
ஒரே ராத்திரியில் நடக்கும் கதையாக கொண்டு சென்று எல்லோரையும் ரசிக்க வைக்கிறார் இயக்குநர் ராஜா கருப்பசாமி. இரண்டாம் பாதியை இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம்.
அறிமுக இயக்குநராக இருந்தாலும் தயாரிப்பாளருக்கு சக்சஸ் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக டைட்டிலையே மொத ராத்திரி என கமர்ஷியலாக வைத்தது முதல் முத்துச்செல்வியின் காதலனாகவும் ராஜா கருப்பசாமி நடித்த விதம் சிறப்பு பாராட்டுக்கள்.