சிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, ப்ரியா பவானி ஷங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், சுவாசிகா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் இருமுடி கட்டு. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கதை
பொல்லூரு கிராமத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி நக்ஷத்ரா) சந்தோஷமாக வாழ்கிறார். மினி ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்துவதோடு வாழைத்தோட்டம் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார் ரவி தேஜா. ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போடும் தீவிர பக்தர். மாலை போட்டிருக்கும்போது மட்டும் மதுவைத் தொடமாட்டார், ஆனால் மாலை கழற்றியதும் குடிப்பார். மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார். உள்ளூரில் 5 வது பள்ளி மட்டுமே இருக்க பெண்கள் மேற்கொண்டு வெளியூரில் படிக்க அந்த ஊருக்கு எம்.எல்.ஏ (ரமேஷ் இந்திரா) பேருந்து வசதி செய்து தருகிறார். அதன் பிறகு நடக்கும் திடீர் மரணம், மர்மமான சம்பவங்கள்
அதை அறிந்த ரவி தேஜா என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக ரவி தேஜா சண்டைக் காட்சிகளிலும் நடிப்பிலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். அவரது மனைவியாக பிரியா பவானி சங்கர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்
மகளாக பேபி நக்ஷ்த்ரா சிறப்பாக நடித்துள்ளார். சாய்குமார் கதாபாத்திரம் அருமை. அஜய் கோஷ், சுவாசிகா, ரமேஷ் இந்திரா என இதில் நடித்த அனைவர்களும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். GV பிரகாஷ்குமார்இசையில் பாடல்களும் பிண்ணனி
இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குநர் ஷிவ நிர்வாணா
ஆக்ஷனுடன் குடும்பக் கதையை சென்ட்டிமெண்ட்டுடன் ஐயப்ப சுவாமியையும் இணைத்து பக்கா கமர்ஷியல் படமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.