திருஅருள் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜன் தேஜஸாவர், ஐரா அகர்வால், சாய்தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 28ல் வெளியாகும் படம் அமரம்.
கதை
வாழ்க்கையில் எந்த லட்சியமும் இன்றி பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையாக மலை அடிவாரத்தில் வாழ்ந்து வருகிறார் ராஜன் தேஜஸ்வர். இதற்கிடையே, பணத்திற்காக தனது தந்தையை கொலை செய்த கொலையாளி ராஜன் தேஜஸ்வரை பழிவாங்குவதற்காக தேடிச் செல்கிறார் ஐரா அகர்வால். அங்கு அவர் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆபத்தையும் சந்திக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.
ராஜன் தேஜஸ்வர் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ஹரிஷ் பெராடி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.மிக்கி ஜே மேயரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது., பரத் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கொலைகாரர்களாக மாற்றும் முதலாளிகளின் மறுபக்கத்தை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா. பாராட்டுக்கள்.