Take a fresh look at your lifestyle.

காவிரி நதிநீர் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய எம் பி எல் கே சுதீஷ்

1

காவிரி என்பது தமிழகத்தின் உயிர்நாடி, அதன் உரிமையை பாதுகாப்பது எங்கள் கடமை!

தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் ஒதுக்கீடு முழுமையாகவும், காலதாமதமின்றியும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாநிலங்களவையில் Unstarred Question No. 892 மூலம் மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பினேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர காவிரி நீர் ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட்டதா?

குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கெதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

மேலும் தமிழகத்திற்கு உரிய நீரை உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர்த் தீர்ப்பாய உத்தரவுகளின்படி உரிய நேரத்தில் வழங்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கோரினேன்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம், டெல்டா மக்களின் நலன் மற்றும் தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்கும் குரலாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து செயல்படுவேன்.

தமிழகத்தின் உரிமை… எங்கள் உறுதி!

#LKSudhish #RajyaSabha #Cauvery #CauveryWater #TamilNadu #WaterRights #DeltaFarmers #JalShakti #CWMA #Parliament #DMDK

Rajya Sabha | CP Radhakrishnan | Press Information Bureau – PIB, Government of India