300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய அளவிலான ட்ரோன் விருது பெற்ற சாதனையாளர்

ஒவ்வொரு படத்திலும் கதைக்கேற்ற வான்வழி காட்சிகளை துல்லியமாகப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், திரைப்படங்களுக்கான உயர்தர ட்ரோன் காட்சிப் பதிவுகளையும் (Stock Shots) வழங்கி வருகிறார். இதன் மூலம் திரைப்பட உலகில் “ட்ரோன்மேன்” என்ற பெயரால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள South Asian Media School-இன் Fellow-ஆகவும் இருந்துள்ளார். திரைப்படங்களில் பெற்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு பகிர வேண்டும் என்ற எண்ணத்தில், ZOO Studios India நிறுவனத்தின் கீழ் DroneMan Academy-யை நிறுவினார். “ட்ரோன் என்பது வெறும் கேமரா இயக்கும் கருவி மட்டுமல்ல; எதிர்கால தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கம்” என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, அதற்கான நவீன பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

2014 முதல் 2017 வரை அமெரிக்காவில் உள்ள பல இந்திய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியபோது, ட்ரோன் தொழில்நுட்பத்தின் மீது அவருக்கு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வழங்கிய ஊக்கத்தின் பேரில், 2017-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறையில் ட்ரோன் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.

Comments (0)
Add Comment