One Movie Review

One Movie Review

சங்ககிரி ராஜ்குமார் பலவித தோற்றத்தில் நடித்து ஒருவராக எல்ல வேலையும் செய்து இயக்கி ஆகஸ்ட் 21 ல் வெளியாகும் படம் ONE.

கதை

ராஜா, பூமா, ஜாக்கி , ரூபி உள்ளிட்ட நண்பர்கள் ஒரு விஞ்ஞான மாநாட்டுக்காக போகிறார்கள். அதில் ராஜா பாச உணர்வே இல்லாதவன். உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவைக் கூட மதிக்காமல் எரிந்து எரிந்து விழுவான்.

போகும் வழியில் ஒரு காட்டுப் பகுதியில் வாகனம் பழுதாகிறது. சரி செய்ய சில மணி நேரம் ஆகும் என்ற நிலையில் காட்டுக்குள் போகிறார்கள். அங்கே ஒரு பழைய விஞ்ஞான ஆய்வகம் இருக்கிறது.
அதில் ஒரு வீடியோ கிடைக்கிறது. அதில் பேசும் ஒருவர் (எல்லாமே சங்ககிரி ராஜ்குமார்தான்) தனது ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பு பற்றிச் சொல்கிறார் .

அங்கே இருக்கும் ஒரு சிவப்பு நிற திரவத்தை ஊசி மூலம் ஏற்றிக் கொண்டு , ஒரு சிவப்பு நிற வாயுவை விடுவித்தால் அந்த வாயு சில நொடிகளில் உலகம் முழுவதும் பரவி எல்லா மனிதர்களும் மறைந்து விடுவார்கள். சிவப்பு நிற திரவ ஊசியை போட்டுக் கொண்டவர்கள் மட்டும் உலகத்தில் இருப்பார்கள்
மறைந்த உலக மக்கள் எல்லாம் மீண்டும் உருவாக பத்துநாள் ஆகும்.அந்த பத்து நாளில் உலகமே சிவப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் வசமாகும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். . சிவப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் பத்தாம் நாள் முடிவில் அதே ஆய்வகத்தில் உள்ள பச்சை திரவ ஊசியை போட்டுக் கொண்டு பச்சை நிற வாயுவை விடுவிக்காவிட்டால், அவர்கள் உடல் மட்டும் பற்றி எரிந்து விடும் அல்லது உருகி விடும். மற்ற எல்லா மக்களும் மீண்டு(ம்) வந்து விடுவார்கள்
நான்கு நண்பர்களும் சிவப்பு நிற ஊசி போட்டுக் கொண்டு உலகில் அவர்கள் மட்டுமே இருக்கும் சூழலை உண்டாக்குகிறார்கள். உலகப் பணம், நகைகள் மற்றும் செல்வங்கள் எல்லாம் அவர்களுக்கு என்று ஆகிறது . உலகம் எங்கும் போகிறார்கள். பல்வேறு நாட்டு உணவுகளை உண்டு களிக்கிறார்கள் . ஒரு நிலையில் அவர்களைத் தவிர யாருமே உலகத்தில் இல்லாத நிலையில் ஒரு விபத்தில் நண்பன் ஒருவனை பறிகொடுக்கிறார்கள். எனினும் மற்ற யாருமே இல்லாத – இரைச்சல், சண்டை சச்சரவு இல்லாத அமைதியான உலகம், பாச உணர்வே இல்லாத ராஜாவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. எனவே பத்துநாள் கழித்து மீண்டும் பச்சை வாயுவை திறக்காமல் விட்டால், ஒட்டு மொத்த மனித இனமும் நிரந்தரமாக இல்லாமலே போய்விடும் .நாம் மட்டும் உலகில் நிம்மதியாக ஜாலியாக காய் கனிகளை உண்டு வாழ்வோம் என்கிறான்.
ஆனால் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளை இழக்க விரும்பாத மற்ற நண்பர்கள் இருவர் அதை மறுக்கிறார்கள். ‘நிறைய டாலர்களை மட்டும் எடுத்துக் கொண்டு பச்சை வாயுவைத் திறந்து, உலகத்தை இயங்க வைத்து பச்சை ஊசி போட்டு நம்மையும் காப்பாற்றிக் கொண்டு குடும்பத்தோடு இணைந்து விடலாம்’ என்கிறார்கள் .
கருத்து வேறுபாடு முற்றி அடிதடி சண்டை துப்பாக்கி சூடு எல்லாம் அவர்களுக்குள் நடக்க,அப்புறம் உலகம் என்ன ஆனது என்பதே இந்த ஒன் மேன் .

சங்ககிரி ராஜ்குமார் செய்திருக்கும் தொழில்நுட்ப சாதனைகளுக்கும் அப்பாற்பட்டு படம் சொல்லும் விஷயங்களும் அபாரமாக இருக்கிறது. அவரது பலவிதமான தோற்றத்துடன் நடித்திருப்பதும் சிறப்பு. ஆரம்பத்தில் இயல்பாக துவங்கும் படம் போரடிக்காமல் போகப்போக பரபரப்பாக விறுவிறுப்பாக பயணிக்கிறது பின்னணி இசை எல்லாம் மிக சிறப்பாக இருக்கிறது. தனிமனிதனாக இவ்வளவு கணினி வரைகலை வேலைகளை செய்வதிருப்புது பாராட்டதக்கது.

இயக்குநர் ராஜ்குமார்
பணமும் நகையும் ஒரு நிலைக்கு மேல் உடன் வராது.
பந்த பாசம் பணத்தை விடாய் பெரியது.
தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் மற்றவர்கள் அழியட்டும் என்று நினைப்பவன் நன்றாக வாழவே முடியாது என்ற கருத்துடன் படத்தை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

Comments (0)
Add Comment